தெரு நாய்க்கடி தாக்குதலில் குழந்தைகள் உட்பட 12 பேர் படுகாயம்!
Jan 28, 2026, 11:11 IST
கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி கிராமத்தில் தெரு நாய் கடித்ததில் குழந்தைகள் உள்பட 12 பேர் காயம் அடைந்துள்ளனர். திடீரென நடந்த இந்த தாக்குதலால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தடுப்பூசி மற்றும் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பதே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் என பொதுமக்கள் கூறுகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
