அந்தமானில் பயங்கர நிலநடுக்கம்... ரிக்டர் 4.8 ஆக பதிவு!
Jun 17, 2025, 05:52 IST

நேற்று ஜூன் 16ம் தேதி பிற்பகலில் அந்தமானின் கடல் பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாக தேசிய நில ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் நேற்று பிற்பகல் சரியாக 2.44 மணிக்கு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவாகி உள்ள இந்த நிலநடுக்கம், அந்தமான் கடலில் 128 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 11.06 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 93.49 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!