நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை... இபிஎஸ் கடும் கண்டனம்!

 
இபிஎஸ்
 


 
இந்தியாவில் மே 4ம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்ட நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் தளத்தில்  இது குறித்து  
நீட் தேர்வு நடைபெற்ற நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே கயல்விழி என்ற மாணவி நீட் தேர்வு அச்சத்தால் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

ஸ்டாலின் இபிஎஸ்
 
தமிழ்நாட்டில் ஆட்சி, நாடாளுமன்றத்தில் 39 எம்.பி.க்கள் என அத்தனை அதிகாரங்களையும் திமுக பெற்றது “நீட் தேர்வு ரத்து” என்ற வாக்குறுதியால் தானே? “ரகசியம் இருக்கிறது, ஆட்சிக்கு வந்ததும் பாருங்கள்” என்று வாய் சவடால் பேசியதெல்லாம் எங்கே போனது? வெட்கம், மானம், சூடு, சுரணை எல்லாம் எங்கே போனது?

உங்களுடைய தேர்தல் அரசியலுக்கான ஒற்றைப் பொய்யால் மட்டுமே 21 மாணவ மாணவியரின் உயிர் பறிபோய் இருக்கிறது. இன்னும் எத்தனை பிள்ளைகள் மு.க.ஸ்டாலின் அவர்களே? உங்களுக்கு இப்போது கூட மனசாட்சி உறுத்தவில்லையா?

ஸ்டாலின் இபிஎஸ்

“நீட் ஒழிய வேண்டும் என்றால் ‘2.ஓ’ வர வேண்டும்” என்று கூச்சமின்றி திமுக-வினர் 2026ல் வாக்கு கேட்கும் போது, “உரிய மரியாதையுடன்” மக்கள் பதில் அளிப்பார்கள்! இத்தனை மாணவ- மாணவியரின் மரணங்களுக்கு உரிய நீதியை, மக்கள் நிச்சயம் வழங்குவார்கள்! எனக் கூறியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web