மாணவர்களே, ஒவ்வொருவருக்கும் இவ்வுலகில் ஆளுமைமிக்க நாற்காலி காத்துக்கொண்டிக்கிறது ... அன்பில் மகேஷ்!

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தோ்வு முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகவுள்ளன. இது குறித்து பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "இது மாணவர்களுக்கான மதிப்பீடு கிடையாது. தேர்வுக்கான மதிப்பீடு மட்டுமே" என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதி முடிவடைந்தது. தோ்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் எழுதினா். விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி ஏப்ரல் 17ம் தேதி நிறைவடைந்ததை அடுத்து மதிப்பெண் விவரம் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.
பிளஸ் 2 தோ்வு முடிவுகள் மே 9ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஒரு நாள் முன்னதாக வியாழக்கிழமை மே 8ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெளியிடவுள்ளாா். இதையடுத்து மாணவா்கள் தங்களது தோ்வு முடிவுகளை https://tnresults.nic.in/ https://results.digilocker.gov.in/ இணையதள முகவரிகளில் பதிவெண் மற்றும் பிறந்த தேதி இவைகளை உள்ளீடு செய்து அறிந்து கொள்ளலாம்.
மேலும் பள்ளி மாணவா்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும், அவா்கள் பள்ளியில் சமா்ப்பித்த கைப்பேசி எண்ணுக்கும், தனித்தோ்வா்களுக்கு அவா்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தபோது வழங்கிய கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலமாகவும் தோ்வு முடிவுகள் அனுப்பப்படும் என தோ்வுத் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்னும் சற்று நேரத்தில் பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், "இது மாணவர்களுக்கான மதிப்பீடு கிடையாது. தேர்வுக்கான மதிப்பீடு மட்டுமே" என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் "இது மாணவர்களுக்கான மதிப்பீடு கிடையாது. தேர்வுக்கான மதிப்பீடு மட்டுமே" என தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மே 8ம் தேதி வியாழக்கிழமை பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுகிறோம். முதல்வரின் கூற்றுப்படி "இது மாணவர்களுக்கான மதிப்பீடு கிடையாது. தேர்வுக்கான மதிப்பீடு மட்டுமே" என்பதை மாணவச் செல்வங்களுக்கு அன்போடு தெரிவிக்கிறேன்.
மதிப்பெண்களை அளவாக கொள்ளாமல், தங்களின் திறமைகள் சார்ந்த துறைகளில் மாணவச் செல்வங்கள் முன்னேறிக் கொண்டே இருப்பார்கள் எனும் நம்பிக்கை எங்கள் அனைவருக்கும் உண்டு. மாணவர்களே… உங்கள் ஒவ்வொருவருக்கும் இவ்வுலகில் ஆளுமைமிக்க நாற்காலி காத்துக்கொண்டிக்கிறது. வாழ்த்துகள் என கூறியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!