அதிர்ச்சி வீடியோ!! ஆசிரியரை ஓட ஓட விரட்டி தாக்கிய மாணவனின் பெற்றோர் !!

 
செல்வி

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகேயுள்ள கீழநம்பிபுரம் கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி என்பவரின் மகள் செல்வி. செல்விக்கு திருமணம் ஆகி அவரது கணவர் சிவலிங்கத்துடன் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் வசித்து வருகிறார். சிவலிங்கம் மற்றும் செல்வி தம்பதிக்கு பிரகதீஸ் (7) என்ற மகன் உள்ளான். பிரகதீஸ் தனது தாத்தா முனியசாமி உடன் கீழநம்பிபுரத்தில் வசித்து வருகிறார். சிறுவன் அங்குள்ள அரசு உதவி பெறும் இந்து தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். அந்தப் பள்ளியில் வீரப்பட்டியை சேர்ந்த குருவம்மாள் (60) தலைமை ஆசிரியராகவும், தூத்துக்குடி தருவைகுளத்தைச் சேர்ந்த பாரத் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.


இந்நிலையில் நேற்று வகுப்பில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது பிரகதீஸ் கீழே விழுந்ததாக தெரிகிறது. அப்போது ஆசிரியர் பாரத், மெதுவாக விளையாடும்படி மாணவர்களிடம் சத்தமாக பேசியதாக கூறப்படுகிறது. ஆனால் மாணவர் பிரகதீஸ் வீட்டுக்குச் சென்று தனது தாத்தா முனியசாமியிடம், ஆசிரியர் பாரத் தன்னை அடித்ததாக கூறியுள்ளார். 

இதையடுத்து முனியசாமி அவசர போலீஸ் எண் 100 அழைத்து புகார் செய்துள்ளார். இதை எடுத்து போலீசார் இன்று பள்ளியில் சென்று விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்படி ஒரு சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்று பள்ளி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதியம் பள்ளிக்குச் சென்ற சிவலிங்கம் அவரது மனைவி செல்வி, செல்வியின் தந்தை முனியசாமி ஆகியோர் எப்படி பையனை அடிக்கலாம் என்று ஆசிரியர் பாரத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் ஒரு கட்டத்தில் ஆசிரியர் பாரத்தை ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளனர்.‌ இதை தடுக்க வந்த பள்ளி தலைமை ஆசிரியர் குருவம்மாளையும் தாக்கி உள்ளனர். 

செல்வி

இது குறித்து சம்பவம் கேள்விப்பட்டதும் எட்டையாபுரம் போலீசார் விரைந்து சென்று தாக்குதலில் ஈடுபட்ட சிவலிங்கம் , செல்வி மற்றும் முனியசாமி ஆகிய மூன்று பேரையும் பிடித்தனர். மாணவரின் பெற்றோர் ஆசிரியர் மீது தாக்கல் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகன் மீது பாசம் இருந்தாலும் அங்கு என்ன நடந்தது என உண்மையில் அறிந்துகொள்ள சிறிதும் முயற்சிக்காமல், இப்படி அடாவடியாக செய்த மூன்று பேரையும் சிறையில் அடைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுபோன்ற பொறுப்பில்லாத பெற்றோர்களால் பிள்ளைகளின் படிப்பும், எதிர்காலமும்தான் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web