திணறும் உற்பத்தியாளர்கள்... நாமக்கல்லில் 40% முட்டைகள் தேக்கம்... மயோனைஸ் தடை எதிரொலி!

தமிழகத்தில் நாமக்கல் மண்டலத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் தினமும் சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. மொத்த உற்பத்தியில் தினசரி சுமார் 40 சதவீதம் முட்டைகள் கேரள மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. சுமார் 20 லட்சம் முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு போக மீதமுள்ள முட்டைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. கோடைகாலங்களில் முட்டை உற்பத்தி வெகுவாக குறைவது வழக்கம்.
கோழிகள் தீவனம் சரியான அளவு எடுத்துக் கொள்ளாமையும் முட்டை உற்பத்தி சரிவுக்கு காரணம். தற்போது தினசரி சுமார் 50 லட்சம் முட்டைகள் வரை உற்பத்தி சரிந்துள்ளது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு இருப்பதால் சத்துணவு திட்டத்திற்கு தினசரி அனுப்பப்பட்டு வந்த சுமார் 1 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது.
பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனைசுக்கு தமிழக அரசு ஓராண்டு தடை விதித்துள்ளது. இதனால் உணவகங்களுக்கு அனுப்பபட்டு வந்த சுமார் 80 லட்சம் முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது நாமக்கல் பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளில் 2 கோடிக்கும் அதிகமான முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. கத்தார் ஓமன் மாலத்தீவு ஆப்ரிக்கா உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகளில் பண்ணையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!