அடுத்தடுத்து விபரீதம்... ஆன்லைனில் விளையாட விடாததால் தாய், தந்தை, அக்கா என 3 பேரை அடித்துக் கொன்ற கல்லூரி மாணவன்!

 
பிரசாந்த் கலியா

அடுத்தடுத்து விபரீதமாக என்ன செய்கிறோம் என்பதையே உணராமல், ஆன்லைனில் விளையாட அனுமதிக்காத தாய், தந்தையையும், அக்காவையும் அடித்தே கொன்ற கல்லூரி மாணவனைப் போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீப காலங்களாக இளைஞர்களிடையே மன அழுத்தம் அதிகரித்து வருகிறது. அதைப் போலவே செல்போன் பயன்பாடும், போதைப் பொருட்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தன் குடும்பத்தினரை கல்லூரி மாணவர் ஒருவர் கொலைச் செய்திருக்கிறார்.

ஒடிசா மாநிலம் ஜெகத்சிங்பூர் மாவட்டம் ஜெயபடாசெதி ஷகி பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் கலியா(65). இவரது மனைவி கனக்லதா(62). இவர்களுக்கு ரோஸ்லின்(25) என்ற மகளும், சூர்யகாந்த் (21) என்ற மகனும் இருந்தனர். சூர்யகாந்த் கல்லூரியில் படித்து வந்தார். 

போலீஸ்

சூர்யகாந்த் செல்போனில் ஆன்லைன் கேமிற்கு அடிமையாக இருந்துள்ளார். தொடர்ந்து செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடி வந்ததால் அவரால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. அவரது பெற்றோரும், அக்காவும் செல்போனில் கேம் விளையாடுவதை கண்டித்துள்ளனர்.  

இந்நிலையில், செல்போனில் கேம் விளையாடுவதை கண்டித்ததால் ஆத்திரமடைந்த சூர்யகாந்த் நேற்று அதிகாலை 3 மணிக்கு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தந்தை பிரசாந்த், தாயார் கனக்லதா, அக்கா ரோஸ்லின் ஆகிய 3 பேரையும் கல்லால் அடித்துக் கொலை செய்தார்.  

ஆம்புலன்ஸ்

3 பேரையும் கல்லால் அடித்துக் கொன்ற பிறகு சூர்யகாந்த் அருகில் உள்ள கிராமத்தில் தலைமறைவாகி விட்டதாகத் தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கிராமத்தில் பதுங்கி இருந்த சூர்யகாந்தையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம்  குறித்து வழக்குப்பதிவு செய்தி சூரியகாந்திடம்   தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web