திடீர் மரணம்.... தந்தையின் சடலத்தின் முன்பு திருமணம் செய்து கொண்ட மகன்!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே, கவணை கிராமத்தில் தந்தை உடல்நலக் குறைவு காரணமாக திடீரென உயிரிழந்த நிலையில், தந்தையின் சடலத்தின் முன்பு மகன் திருமணம் செய்துக் கொண்ட சம்பவம் உறவினர்களிடையே நெகிழ்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
விருத்தாசலம், கவணை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான இவர் நேற்று முன் தினம் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இந்நிலையில், செல்வராஜின் இளைய மகன் அப்பு, கொளப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விஜயசாந்தி (23) என்ற பெண்ணைக் காதலித்து வந்த நிலையில், தனது தந்தை இறந்த நிலையில், தந்தையின் சடலத்தின் முன்பாக அவருடைய பாதம் தொட்டு, தன்னுடைய காதலி விஜயசாந்தியைத் திருமணம் செய்து கொண்டார். துக்க நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் மணமக்களை ஆசீர்வாதம் செய்து வாழ்த்தினார்கள்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!