மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு.. !! பள்ளி ஆசிரியரை தட்டி தூக்கிய காவல்துறை!!

 
மலர்மதி

மதுரை மேலூர் அருகேயுள்ள கீழையூரைச் சேர்ந்தவர் விநாயக சவுத்திரி (44). இவர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பள்ளியில் மாணவிகள் சிலருக்கு ஆசிரியர் விநாயக சவுத்திரி பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறப்படுகிறது.

மலர்மதி

இது குறித்து மாணவிகள் சிலர் வெளிப்படையாக புகார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிகள் தலைமை ஆசிரியை மலர்மதி, பள்ளி மேலாண்மை குழுவிடம் எழுத்து பூர்வமாக புகார் அளித்தனர். ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பள்ளி மேலாண்மை குழு தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டியிடம் வழங்கினர். 

இதனையடுத்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் முத்துக் கண்ணன் பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்தினார். இதில் மாணவிகளுக்கு ஆசிரியர் விநாயக சவுத்திரி பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என்பது தெரியவந்தது. 

மலர்மதி

இது குறித்து முத்துக் கண்ணன் அளித்த புகாரின் பேரில், சிவகங்கை மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து ஆசிரியர் விநாயக சவுத்திரியை கைது செய்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web