சூப்பர்!! சில்லுன்னு மாறப்போகுது!! அடுத்த 2 நாட்களுக்கு தொடர் மழை!!

 
மழை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் கொளுத்தி வருகிறது. சித்திரை மாத வெயில் இப்போதே ஆரம்பித்து விட்டதாக பொதுமக்கள் புலம்பி தவித்து வருகின்றனர். இந்நிலையில் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி இன்றும் நாளையும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் காரைக்கால் , புதுச்சேரி பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் குறையும்.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நாளை (மார்ச் 4) தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் லேசானது முதல் மிதமான மழை   பெய்யக்கூடும். ஒருசில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ்  குறைவாக இருக்கக்கூடும்.

rain

நாளை மறுநாள் (மார்ச் 5) தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் லேசானது முதல் மிதமான மழை   பெய்யக்கூடும்.மார்ச் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

Rain

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும்  குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். சென்னையின் சில பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை:  ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலால் மக்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web