அசத்தல்... முழுவதும் பெண்களே இயக்கும் பைக் சேவை! குறைந்த பணத்தில் பாதுகாப்பான பயணம்..!
பெண்கள் செய்யாத பணிகளே இல்லை எனும் அளவிற்கு அனைத்து துறைகளிலும் பெண்களின் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது. அந்த வகையில் பெண்களுக்காக மட்டுமே பெண்கள் ரேபிட்டோ பைக் சேவை தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமும், ரேபிடோ நிறுவனமும் இந்த திட்டத்திற்காக கை கோர்த்துள்ளன.
மெட்ரோ ரயில் நிலையத்தைப் பயன்படுத்தும் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இந்த ரேபிடோ பைக் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக ராஜேஷ் சதுர்வேதி தெரிவித்துள்ளார். இந்த சேவை மூலம் எந்த நேரமும் பெண்கள் பாதுகாப்பாக பயமின்றி பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மட்டுமே இயக்கும் இந்த பைக் சேவை வசதி முதற்கட்டமாக ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, எழும்பூர், சைதாப்பேட்டை, அரசினர் தோட்டம் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் மட்டும் தொடங்கப்பட்டுள்ளது. மக்களின் தேவைகளின் அடிப்படையில் எல்லா மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இந்த சேவை விரிவுப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரேபிடோ பைக் சேவையை ஆண்களும் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். ஆட்டோ, டாக்ஸி போன்ற மற்ற வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் குறைந்த விலையில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பெண் பயணிகளிடம் இந்த சேவைக் குறித்து கேட்டறிந்த போது, "பெண் ஓட்டுநர்களுடன் பயணிப்பதால் அசௌகரியங்கள் இல்லை. இது வரவேற்கக் கூடிய நடவடிக்கை" என பெரும் உற்சாகத்துடன் பதில் அளிக்கின்றனர். வரும் காலகட்டங்களில் இந்த சேவை முக்கியமானதாகவும், அவசியமானதாகவும் மாறலாம் எனவும், அதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!