மே 22 முதல் 10, 11 ம் வகுப்புகளுக்கு துணைத் தேர்வு விண்ணப்பங்கள்!

 
அரசு தேர்வுகள் இயக்ககம்


 2024-25ம் ஆண்டுக்கான 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. 10, 11 ம் வகுப்புகளுக்கு ஜூலை 4 ம் தேதி முதல் துணைத் தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் நடைபெற்ற 10 மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் வெளியிட்டுள்ளார்.   

அரசுத் தேர்வுகள் இயக்குநர் அதிரடி அறிவிப்பு


அப்போது செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர், 10, 11 ம் வகுப்புகளுக்கு ஜூலை 4ம் தேதி முதல் துணைத் தேர்வு நடைபெறும். துணைத் தேர்வு அட்டவணை நாளை மே 17ம் தேதி  வெளியிடப்படும். துணைத் தேர்வுக்கு மே 22 முதல் ஜூன் 6 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மே 19ம் தேதி முதல் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்." எனக் கூறியுள்ளார். 

தேர்வுகள் இயக்ககம்


10 ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியாகியுள்ள நிலையில், 11 ம் வகுப்பு தேர்வு முடிவுகளை மாணவர்கள் பிற்பகல் 2 மணிக்கு தெரிந்து கொள்ளலாம். 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் மாவட்டவாரியான தேர்ச்சி விகிதத்தில் சிவகங்கை முதலிடம் பிடித்துள்ளது. சிவகங்கையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களில் 98.31% மாணவ, மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது