சிறை கைதிகளுக்கு இலவச சட்ட உதவி கட்டாயம்... உச்சநீதிமன்றம் உத்தரவு!
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் வணிக ரீதியாக கடத்தல் பொருட்கள் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, சென்னை உயர்நீதிமன்றம் பிணை மறுத்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மனுவை விசாரித்த நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் கே. வினோத் சந்திரன் உச்ச நீதிமன்றத்தில் அமர்ந்தனர்.
மனுதாரர் வழக்கறிஞர் எம். சீனிவாசன் வாதிட்டபடி, குற்றம்சாட்டப்பட்ட நபர் 4 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடுகிறார், ஆனால் அவருக்கு சட்ட உதவி கிடைக்க மறுக்கப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு நீதிபதிகள், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வழக்கறிஞர் வசதி இல்லாத போது இலவச சட்ட உதவி வழங்கும் உரிமையை நீதிமன்றங்கள் உறுதியாக பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
மேலும், தகுதியானவர்களுக்கு இலவச சட்ட உதவி வழங்கப்படுவதை விசாரணை நீதிமன்றங்கள் பதிவு செய்ய வேண்டும். இந்த தகவலை அனைத்து மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கும் அனுப்பி, கீழ் வரும் விசாரணை நீதிமன்றங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
