ட்ரோன் மூலம் கண்காணிப்பு... நடுரோட்டில் பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள்!

அதன்படி இரவு ரோந்துக்கு மாநிலம் முழுவதும் அனைத்து காவல் நிலையத்திற்கும் பயிற்சி வழங்கி காவலர்களுக்கு 'டிரோன் கேமராக்கள்' வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் போலீசார் இரவு நேரத்தில் மாவட்டம் முழுவதும் டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பதி எஸ்.பி. ஹர்ஷவர்தன்ராஜூ உத்தரவின் பேரில் திருப்பதி இந்திரா பிரியதர்ஷினி மார்க்கெட், காட்டன் மில் உட்பட பகுதிகளில் இருட்டிலும் தெளிவாக வீடியோ பதிவு செய்யும் ட்ரோன் கேமராக்கள் கொண்டு நேற்று முன்தினம் இரவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ட்ரோன் கேமராவில், நள்ளிரவில் இந்திரா மைதானத்தில் சில வாலிபர்கள் பிறந்தநாள் விழா கொண்டாடுவது பதிவாகியுள்ளது. உடனடியாக திருப்பதி சிறப்பு படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த இளைஞர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று கவுன்சலிங் வழங்கியுள்ளனர். அப்போது, மீண்டும் சாலையில் பிறந்தநாள் விழா கொண்டாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
:இரவில் தங்கள் பிள்ளைகள் எங்கு செல்கிறார்கள் என்பதில் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும். நேரம் கடந்த பிறகும் வீட்டிற்கு வரவில்லை எனில் அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? ஒவ்வொரு நாளும் தங்கள் பிள்ளைகளிடம் கேட்டால், அவர்கள் நிச்சயமாக சரியான நேரத்தில் வீட்டிற்கு வருவார்கள்.
தங்கள் பிள்ளைகள் மோசமான பாதையில் சென்றால், அதில் குடும்பத்தினரும் பங்கு வகிக்கிறார்கள் என்பதை நினைவு கொள்ள வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இல்லாவிட்டால் தவறான பாதைக்கு செல்ல நேரிடும் எனக் கூறி அவர்களின் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!