மத்திய அரசு அடுத்த அதிரடி... பாகிஸ்தானுக்கு தபால் சேவையை நிறுத்தம்?

 
இந்தியா பாகிஸ்தான்
 ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள்  திடீரென நடத்திய  துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  

இந்தியா பாகிஸ்தான்


அட்டாரி- வங்க எல்லை மூடல், சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்களை வெளியேற்றுதல் உட்பட  பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. தற்போது பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யவும், அந்நாட்டின் வழியாக மற்ற நாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்ட கப்பல்கள் இந்திய துறைமுகங்களுக்கு வருவதற்கும்  இந்திய கொடி ஏற்றப்பட்ட கப்பல்கள் பாகிஸ்தான் துறைமுகங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வழிகள் அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பாகிஸ்தான்
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு தபால் சேவையை நிறுத்த முடிவு செய்திருப்பதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.  பாகிஸ்தானில் இருந்து வான்வழி, தரைவழி மூலம் வரும் தபால்களின் பரிமாற்றத்தை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web