மத்திய அரசு அடுத்த அதிரடி... பாகிஸ்தானுக்கு தபால் சேவையை நிறுத்தம்?

அட்டாரி- வங்க எல்லை மூடல், சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்களை வெளியேற்றுதல் உட்பட பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. தற்போது பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யவும், அந்நாட்டின் வழியாக மற்ற நாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்ட கப்பல்கள் இந்திய துறைமுகங்களுக்கு வருவதற்கும் இந்திய கொடி ஏற்றப்பட்ட கப்பல்கள் பாகிஸ்தான் துறைமுகங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வழிகள் அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு தபால் சேவையை நிறுத்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானில் இருந்து வான்வழி, தரைவழி மூலம் வரும் தபால்களின் பரிமாற்றத்தை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!