நோட் பண்ணிக்கோங்க... இன்று முதல் இந்த எக்ஸ்பிரஸ் ரயில் பகுதியாக ரத்து!

 
ரயில்
பயணிகள் நோட் பண்ணிக்கோங்க. பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று மே 18ம் தேதி முதல் விழுப்புரம் - திருப்பதி இடையே இயக்கப்படும் விரைவு ரயில் குறிப்பிட்ட நாட்களில் பகுதி அளவில் ரத்து செய்யப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே  மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தெற்கு மத்திய ரயில்வேயின் குண்டக்கல் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளின் பல்வேறு பிரிவுகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, விழுப்புரத்திலிருந்து திருப்பதி வரை இயக்கப்படும் விரைவு ரயில் பகுதி அளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரயில் தண்டவாளம் நடைமேடை ப்ளாட்ஃபாரம்

இதன்படி விழுப்புரத்திலிருந்து காலை 5.40 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் (வண்டி எண். 16854), மே 18,20,21,22,25,27,28,29, ஜூன் 1,3  ஆகிய தேதிகளில் காட்பாடி - திருப்பதி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக விழுப்புரத்திலிருந்து காட்பாடி வரை மட்டுமே இந்த ரயில் இயக்கப்படும்.

 சிறப்பு ரயில்

எதிர்வழித்தடத்தில் திருப்பதியிலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட வேண்டிய திருப்பதி -விழுப்புரம் விரைவு ரயில் (வண்டி ண்.16853), மே 18,20,21,22,25,27,28,29, ஜூன் 1, 3 தேதிகளில் திருப்பதி -காட்பாடி இடையே   ரத்து செய்யப்பட்டுள்ளது.  இதனால் இந்த விரைவு ரயில் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து மாலை 4.45 மணிக்கு விழுப்புரத்துக்குப் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது