குடை எடுத்திட்டு போங்க!! 6 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை!!

 
மழை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் 4 நாட்களுக்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யலாம். 

மழை
அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழைக்கு பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாளை மார்ச் 31 முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை தமிழகம்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

மழை

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த 48 மணி நேரத்திற்கு புறநகர் பகுதிகள், நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யலாம் எனத் தெரிவித்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலையாக  26 டிகிரி செல்சியசும்,  அதிகப்பட்சமாக  34 டிகிரி செல்சியசும் நிலவக்கூடும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அழகரை எஸ்டேட்டில் அதிகபட்சமாக 14 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web