24 மணி நேரத்தில் 52 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை... பாகிஸ்தானில் அதிரடி!

 
பயங்கரவாதிகள்

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 3 மாகாணங்களில் நடைபெற்ற அதிரடி நடவடிக்கைகளில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த 52 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு படை மற்றும் ராணுவம் இணைந்து இந்த வேட்டையை நடத்தியது. தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

பயங்கரவாதிகள்

பஞ்சாப் மாகாணத்தில் நடைபெற்ற நடவடிக்கையில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலுசிஸ்தான் மாகாணத்தில் நடந்த இரண்டு தனித்தனி நடவடிக்கைகளில் 41 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்கள் தீவிரவாதிகளின் முகாம்களை குறிவைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் என்கவுண்டர் பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படை சுட்டுக்கொலை

கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடைபெற்ற தாக்குதலில் ஒரு தளபதி உட்பட டிடிபி அமைப்பைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர். பயங்கரவாத செயல்களை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!