தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்... பவன் கல்யாண் வலியுறுத்தல்!

 
பவன் கல்யாண்
தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து இந்தியா - இலங்கை அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் வலியுறுத்தியுள்ளார். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக மீனவர்கள் 24 பேரை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் இலங்கை கடற்படையில் தொடர் அத்துமீறலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தமிழக மீனவர்களுக்கு ஆதரவு குரல் எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், "வங்கக்கடலில் 5 வெவ்வேறு சம்பவங்களில் தமிழக மீனவர்கள் 24 பேர் தாக்கப்பட்ட சம்பவம் வருத்தமளிக்கிறது. இலங்கை கடற்படையின் இத்தகைய நடவடிக்கையால் காயமடைந்த நாகை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக இந்தியாவும், இலங்கையும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web