கிராம தூய்மைக் காவலர்களுக்கு மதிப்பூதியம் உயர்வு... தமிழக அரசு உத்தரவு!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பணியாற்றும் தூய்மைக் காவலர்களுக்கான மாதாந்திர மதிப்பூதியம் ரூ.5,000-ல் இருந்து ரூ.6,000 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காக ரூ.417 கோடி கூடுதல் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளர்களின் நீண்டநாள் கோரிக்கையை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கிராம ஊராட்சிகளை தூய்மையாக பராமரிக்கும் பணியில் தூய்மைக் காவலர்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். அவர்கள் வீடுதோறும் திடக்கழிவுகளை சேகரித்து தரம் பிரித்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் பணியை கருத்தில் கொண்டு மதிப்பூதியத்தை உயர்த்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், மாநிலம் முழுவதும் பணியாற்றும் தூய்மைக் காவலர்களுக்கு ரூ.1,000 உயர்வு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த உயர்வு தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
