தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திடீர் டெல்லி பயணம்! அமித் ஷாவை சந்திக்கிறாரா?!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திடீரென நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் பொன்முடியின் சர்ச்சைப் பேச்சு , மசோக்கள் விஷயத்தில் ஆளுநருக்கு பின்னடைவு போன்ற சர்ச்சைகளுக்கு நடுவே ஆளுநரின் டெல்லி பயணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருந்த நிலையில், இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம், ஆளுநருக்கு கடும் கண்டனம் தெரிவித்து, ஆளுநர் நிலுவையில் வைத்திருந்த 10 மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாகக் கருதப்படும் என்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.
மேலும் இது குறித்த வழக்கில், மாநில அரசு அனுப்பி வைக்கும் மசோதாவுக்கு ஒரு மாதத்திற்குள் ஒப்புதல் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு அறிவுறுத்தல்களை ஆளுநருக்கு வழங்கிய உச்சநீதிமன்றம், மாநில ஆளுநா்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது மூன்று மாதங்களுக்குள் குடியரசுத் தலைவா் முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து ஆலோசிப்பதற்காக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் ஓரிரு நாட்கள் தங்கி, இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களை ஆளுநர் ரவி சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததற்கு குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!