10வது பாஸானவர்களுக்கு தமிழக அரசின் 3 நாட்கள் இலவச ட்ரோன் பயிற்சி... எப்படி விண்ணப்பிப்பது?

10வது தேர்ச்சியடைந்தவர்களுக்கு தமிழக அரசின் 3 நாட்கள் இலவச ட்ரோன் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
சென்னையில் வரும் ஏப்ரல் 28 முதல் ஏப்ரல் 30 வரை 3 நாட்கள் முற்றிலும் இலவச ட்ரோன் பயிற்சி திட்டம் நடைபெற உள்ளது. இந்த பயிற்சியை தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வழங்க உள்ளது.
இந்த பயிற்சி திட்டத்தில் ட்ரோன்களின் அடிப்படைகள், ட்ரோன் விதிமுறைகள் பற்றிய கண்ணோட்டம், ட்ரோன்களின் வகைகள் மற்றும் செயல்பாடுகள், பராமரிப்பு, அவசர காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், சிமுலேட்டர் மற்றும் நேரடி களப் பயிற்சி, ட்ரோன் பாகங்களை இணைப்பது மற்றும் பிரிப்பது, விமான கட்டுப்பாட்டு சென்சார் அளவுத்திருத்தம், கண்காணிப்பு மற்றும் மேப்பிங் ஒருங்கிணைப்பு, ACT மற்றும் ரேடியோ டெலிபோனிக் போன்ற முக்கியமான விஷயங்கள் கற்றுத் தரப்படும்.
அது மட்டுமின்றி, அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் பற்றியும் விரிவாக விளக்கப்பட உள்ளது. விண்ணப்பதாரர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். வெளியூர்களில் இருந்து வரும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் வசதியும் உள்ளது. தேவைப்படுபவர்கள் விண்ணப்பித்து இந்த வசதியைப் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த பயிற்சி பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற விரும்புபவர்கள் www.editn.in என்ற வலைதளத்தைப் பார்வையிடலாம். கூடுதல் தகவல்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, 2 இடிஐஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை - 600032 என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்கள்: 9360221280 / 9543773337. பயிற்சியின் முடிவில் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!