ஜூலை 1 முதல் ஓரணியில் தமிழ்நாடு... முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக கடிதம்!
Jun 28, 2025, 16:10 IST

ஜூலை 1ம் தேதி முதல் ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையை நான் தொடங்கி வைக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.
திமுக தொண்டர்கள் மக்களைக் கொண்டு ஓரணியில் தமிழ்நாட்டை கட்டமைப்பார்கள். 2026ல் மீண்டும் திமுக ஆட்சியை அமைப்பதில் முனைப்புடன் செயலாற்ற வேண்டும். பாராட்டுகளில் மட்டும் மயங்கிடாமல், விமர்சனங்களையும் வரவேற்கிறேன்.
கட்சியினரின் மனக்குரலை அறியவே 'உடன்பிறப்பே வா' எனும் நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறுகிறது. மதவாத பிரிவினையை உருவாக்குவோருக்கும், துணைபோகும் துரோகிகளுக்கும் தமிழ்நாட்டில் இடமில்லை என தொண்டர்களுக்கு முதல்வர் எழுதியுள்ள உருக்கமான கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!