நீங்களும் போறீங்களா?! பிரபாகரன் நரகத்தில் இருக்கிறார்!! சரத் பொன்சேகா காட்டம் !!

 
பழ.நெடுமாறன்

தமிழீழ தலைவர் பிரபாகரன் உயிரோடு தான் இருக்கிறார். விரைவில் அவர் நலமுடன் திரும்பி வருவார் என, உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் நேற்று அறிவித்திருந்தார். தன்னுடன் தொடர்பில் உள்ள அவரது குடும்பத்தினர் ஒப்புதலுடன் இந்த தகவலை வெளியிடுவதாகவும் அவர் தெரிவித்தார். 

தமிழகத்தில் ஒருசிலர் மட்டுமே இதனை வரவேற்றனர். ஆனால், தலைவர்கள் பலரும் பழ.நெடுமாறனின் இந்த அறிவிப்பை அதிருப்தியுடனே எதிர்கொண்டனர். இந்த நிலையில், இலங்கை அரசியல்வாதிகள் பலரும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். 

பழ.நெடுமாறன்

இது தொடர்பாக இலங்கை எம்பியான முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர கூறியதாவது, பல லட்சக்கணக்கான பொதுமக்களை படுகொலை செய்தவர் பிரபாகரன். அதனால்தான் நரகத்தில் இருக்கிறார் பிரபாகரன். பிரபாகரனை அழைத்துவர விரும்பினால் பழ.நெடுமாறனும் நரகத்துக்குதான் போக வேண்டும், என காட்டமாக கூறினார்.

இலங்கை இறுதிப் போரை வழிநடத்திய முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா கூறுகையில், 14 ஆண்டுகளாக பழ.நெடுமாறன் பொய்யையே திரும்ப திரும்ப சொல்லி வருகிறார். பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகன்களான சார்லஸ், பாலச்சந்திரன் மற்றும் மகள் துவாரகா ஆகியோரும் இறுதிப்போரில் உயிரிழந்துவிட்டார்கள். பிரபாகரன் குடும்பத்தில் எவரும் தப்பவில்லை. 

பழ.நெடுமாறன்

ஆனால், இலங்கையிலுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் சிலருக்கும், இந்தியாவிலுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் சிலருக்கும் பிரபாகரனின் பெயரை அடிக்கடி உச்சரிக்காவிட்டால் அரசியல் பிழைப்பு நடத்த முடியாது. அவர்களில் ஒருவர்தான் பழ.நெடுமாறன். அவர் இறுதிப்போர் நிறைவடைந்த காலம் தொட்டு இன்று வரைக்கும் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்ற பொய்யான தகவலை வெளியிட்டு வருகின்றார், 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

 

From around the web