தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்... மே 7ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவு!

தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் இன்றளவிலும் விஞ்ஞானிகளுக்கும், கட்டிடவியல் வல்லுநர்களுக்கும் பண்டைய தமிழர்களின் கட்டிடக்கலை சிறப்பை பறைசாற்றிக் கொண்டு கம்பீரமாக இருந்து வருகிறது.
இன்றைய நவீன தொழில் நுட்ப வளர்ச்சிக்கு சவால் விடும் விதமாக, கட்டிடக் கலையில் சிறந்து விளங்கும் இந்த கோவிலுக்கு தினமும் வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இந்நிலையில் தஞ்சாவூர் பெரிய கோவிலின் தேரோட்டம் மே 7ம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 7ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!