டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்களுக்கு விடுமுறை! கலெக்டர் உத்தரவு!

 
மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள்!! தடுமாறும் குடிமகன்கள் !!

இம்மாதத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்களுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இம்மாதத்தில் வரும் திருவள்ளுவர் தினம், வள்ளலார் நினைவு தினம் மற்றும் குடியரசு தினங்களை முன்னிட்டு, அன்றைய தினங்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் செயல்படாது என மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

tasmac

இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இம்மாதம் 16ம் தேதி திருவள்ளுவர் தினத்தன்றும், 25ம் தேதி வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டும், ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டும் இந்த 3 தினங்களிலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக்கடைகள் மற்றும் FL2, FL3, FL3A மற்றும் FL3AA உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகியவை செயல்படாது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். 

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web