இன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை... நேற்றே குவிந்த ‘குடி’மகன்கள்!

இன்று மே 1ம் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், நேற்றே குடிமகன்கள் டாஸ்மாக் கடைகளில் குவிந்து கைக்கொள்ளாமல் பொறுப்பாக துணி பைகளைக் கொண்டு வந்து சரக்கு பாட்டில்களை வாங்கிச் சென்றனர்.
டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் ஹோட்டல்களில் மது விற்பனை இருக்காது.
இது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தனித்தனியாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனால் மது பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்த உத்தரவை மீறி நாளை மது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக விதிமுறைகளை மீறி மது விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!