ஏப்ரல் 10ம் தேதி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் விடுமுறை... மதுபானப் பிரியர்கள் அதிர்ச்சி!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 4000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட 8 முக்கிய நாட்களில் விடுமுறை அறிவிக்கப்படும். அதன்படி ஏப்ரல் 10ம் தேதி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அன்றைய தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது டாஸ்மாக் கடைகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூலிக்கப்படுவதை தடுக்கும் வகையில், கண்காணிப்பு முறைகள் வலுவடைந்து வருகின்றன. இதன்மூலம் கள்ளச்சந்தை விற்பனையை தடுக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசின் உத்தரவின்படி, திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு தினம், மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி ஆகிய 8 நாட்களில் டாஸ்மாக் கடைகள் இயங்காது. அவ்வாறாக ஏப்ரல் 10ம் தேதி மகாவீர் ஜெயந்தி நாளில் தமிழகம் முழுவாதும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!