இனி மது வாங்கினா பில்... டிஜிட்டல் மயமாகுது டாஸ்மாக் கடைகள்!

 
சக்கைபோடு போட்ட தீபாவளி சேல்ஸ்!! மண்டலம் வாரியாக டாஸ்மாக் விற்பனை பட்டியல்!!

தமிழகம் முழுவதும் அரசு சார்பில் டாஸ்மாக் நிர்வாகத்தின் மூலம் மதுபானங்கள்  விற்பனை நடைபெற்று வருகிறது. டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனையில் பல குளறுபடிகள் நடப்பதாக சமீபகாலமாக தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனை களைய பல்வேறு நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில்  மதுபான விற்பனையை டிஜிட்டல் மயமாக்கி கம்ப்யூட்டர் பில் வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால், விரைவில் தமிழகத்தில் உள்ள அரசு மதுபானக் கடைகளில் மதுபானம் வாங்குபவர்களுக்கு பில் வழங்கப்படும் நடைமுறை அமல்படுத்தப்படும்.

தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள் விடுமுறை!


இதற்காக  பொதுத்துறை நிறுவனமான ரயில்டெல்லுக்கு  டாஸ்மாக் நிறுவனம் ரூ.294 கோடி மதிப்பிலான ஆர்டரை வழங்கியுள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் “ டாஸ்மாக்கின் செயல்பாடுகளை முழுவதும் கணினிமயமாக்கவும், ரசீது வழங்கவும் ஒருங்கிணைந்த தீர்வை உருவாக்கித் தருவதற்கான ஆர்டரைப் பெற்றுள்ளது” என  ரயில்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த டிஜிட்டல் மயமாக்கும் பணியை 5 ஆண்டுகளுக்குள் நிறைவேற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.  இதன் மூலம் மதுபான இருப்பைக் கணக்கு வைக்க டிஜிட்டல் முறையைக் கொண்டுவரும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருந்தது.  இதன்படி மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் வரை டாஸ்மாக் நிறுவனத்தின்  அனைத்து செயல்பாடுகளும் கணினிமயமாக்கப்பட உள்ளன.  

டாஸ்மாக் 2000

இதன் மூலம் கள்ளச் சாராயச் சந்தையைக் கட்டுப்படுத்தலாம் என  டாஸ்மாக் நிர்வாகம் கருதுகிறது. ஜனவரி  மாதமே இதற்கான தொழில்நுட்ப தீர்வுக்கான டெண்டர் கோரப்பட்டது. இப்போது ரயில்டெல் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில காலமாகவே  டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வாங்குபவர்களிடம்   ரூ10 முதல் ரூ100  வரை கூடுதலாக பணம் வசூலிக்கப்படுகிறது என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் வாங்கும் மதுபானங்களை இனி ரசீது போட்டு வாங்கிக் கொள்ளலாம் என்ற  அறிவிப்பு மதுபானப் பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மது ஒழிப்பு துறையின் புதிய அமைச்சராக அறிவிக்கப்பட்ட முத்துசாமி, டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் சம்பந்தப்பட்ட ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த அறிவிப்பால் மதுபானப் பிரியர்கள் குஷி அடைந்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web