ஆசிரியர்கள் ஜீன்ஸ், லெகின்ஸ் அணியத் தடை!! மீறினால் கடும் நடவடிக்கை!!

 
ஜீன்ஸ்

இன்றைய பள்ளி சூழலில் பல்வேறு விபரீதங்களும், அசம்பாவிதங்களும் தொடர்கதையாகி வருகின்றன. இதனை கட்டுப்படுத்த பள்ளிகளும்,மாவட்ட நிர்வாகமும், மாநில அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு விதித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மாணவ  மாணவியருக்கு உடைக் கட்டுப்பாடு இருப்பது போல் ஆசிரியர்களுக்கு உடைக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.  அதன்படி அஸ்ஸாமில் பள்ளிக்கு வரும் ஆசிரியர், ஆசிரியைகளுக்கான புதிய ஆடை கட்டுப்பாடுகளை பள்ளி கல்வி துறை இன்று அறிவித்து உள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் ஆசிரியர், ஆசிரியைகள் ஜீன்ஸ், டி-சர்ட் மற்றும் லெக்கிங்ஸ் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

லெகின்ஸ்

இந்த மாதிரியான ஆடைகளை   பொதுமக்கள் அதிகளவில் ஏற்று கொள்ளவில்லை என விளக்கம் அளித்து உள்ளது. அந்த அறிக்கையில், கல்வி நிலையங்களில் பணிபுரியும் சில ஆசிரியர், ஆசிரியைகள் தங்களது விருப்பத்திற்கேற்ப ஆடைகளை அணிந்து வருகின்றனர்.  மாணவர்கள்  , பெற்றோர்கள்  ஏற்று கொள்ள கூடிய ஒன்றாக அந்த உடைகள் இருப்பதில்லை என தொடர் குற்றச்சாட்டுக்களும், புகார்களும் எழுந்து வருகின்றன.  ஆசிரியர்கள் பணியின்போது, அனைத்து வகையிலும் ஓர் எடுத்துக்காட்டாக இருக்க வேணடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களது ஆடை கட்டுப்பாடானது, நல்லொழுக்கம், நாகரீகம், தொழில் சார்ந்த விதம் மற்றும் பணியிடத்திற்கு ஏற்ற தீவிர நோக்கங்களை பிரதிபலிக்க வேண்டும். இவைகளை கருத்தில் கொண்டு அனைத்து கல்வி நிலையங்களை சார்ந்த ஆசிரியர், ஆசிரியைகளும் பின்வரும் உடை கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என பள்ளி கல்வி துறை  அறிவித்துள்ளது.  இதன்படி, ஆசிரியர், ஆசிரியைகள் என்ன வகையான ஆடைகளை அணியலாம். எவற்றை அணிய கூடாது என அறிவித்து உள்ளது.

ஜீன்ஸ் லெகின்ஸ்

ஆசிரியர்கள் பேண்ட், சட்டை மட்டுமே அணிந்து வரவேண்டும். (டி-சர்ட், ஜீன்ஸ்  உடுத்தக் கூடாது). அதே போல் ஆசிரியைகள் சல்வார், புடவைகளை அணிந்து பள்ளிக்கு வரலாம்.டி-சர்ட், ஜீன்ஸ் மற்றும் லெகிங்ஸ் ஆகியவற்றை உடுத்தக் கூடாது.  ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் என இருவரும் தூய்மையான, உடலை அதிகம் மூடும்படியான மற்றும் கண்ணியமிக்க ஆடைகளை, பளிச்சென்று தெரியாத வண்ணத்தில் அணிவது உத்தமமான செயல்.  விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கூடிய ஆடைகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும் என கேட்டு கொண்டு உள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் இந்த கட்டுப்பாடுகளை ஆசிரிய ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டும். மீறினால் விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web