கோரிக்கைகளை வலியுறுத்தி விடைத்தாள் திருத்தும் மையம் முன்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!

 
ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்கள் பணி பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் விடைத்தாள் திருத்தும் மையம் முன்பு ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

தூத்துக்குடியில் மில்லர் புரத்தில் அமைந்துள்ள பிஎம்சி மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் விடைத்தாள் திருத்தும் மையம் முன்பு தமிழக அரசு ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

ஆசிரியர்கள்

மேலும் பழைய ஓய்வு திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதிக்கீடு உள்ளிட்ட அரசின் சலுகைகள் அனைத்தும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் முதுகலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை மே மாதத்திலேயே நடத்தி முடிக்க வேண்டும் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பி நிரந்தர பணியிடமாக மாற்ற வேண்டும் ஊதிய உயர்வு மற்றும் ஊக்கத்தொகை ஆகியவற்றை முறையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். 

ஆசிரியர்கள்

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் மாரி செல்வம், மாவட்ட சட்ட செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட செய்தி தொடர்பாளர் பாரதிராஜா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web