மின்வாரியத்தின் அலட்சியத்தால் இளம்பெண் பலி!

இது தொடர்பாக பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் பிரசாத் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், "கடந்த 25-04-2025 அன்று இரவு 11 மணியளவில் எனது தெருவில் மின் துண்டிப்பு ஏற்ப்பட்டது. என்ன காரணத்திற்காக மின் துண்டிப்பு ஏற்பட்டது என தெரியாததால் மின்நிலைய அலுவலகத்திற்கு அரசு கொடுத்த 94987 94987 இந்த எண்ணிற்கு தகவல் தெரிவிக்க முயன்றேன்.
பலமுறை தொடர்பு கொண்டும் இந்த எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை. நேரில் சென்று தகவல் கொடுக்க மின் அலுவலகத்திற்கும் சென்றேன். ஆனால், மின் அலுவலகத்திலும் பணியாளர்கள் யாரும் இல்லை. காலை 5 மணிக்கு எனது தெருவில் வசிக்கும் பெண் ஒருவர் தனது வீட்டிற்கு முன்பு அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து இறந்து விட்டார்.
முந்தைய இரவு நான் அழைத்த தொடர்பு எண் சரியாக வேலை செய்து மின் அலுவலகத்திலும் பணியாளர்கள் இருந்து என்னுடைய தகவலை கேட்டு இருந்தால், மின் துண்டிப்பு தகவலை நான் தெரிவித்து இருப்பேன் மின்நிலைய ஊழியர்களும் என்ன காரணத்தினால் மின் துண்டிப்பு ஏற்பட்டது என கண்டறிந்து அறுந்து கிடந்த மின்கம்பியை சரி செய்து இருப்பார்கள். ஆனால், மின்வாரியத்தின் அலட்சியத்தால் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டு விட்டது. இந்த உயிரிழப்பானது முழுக்க முழுக்க மின்வாரியத்தின் அலட்சிய போக்கினால் ஏற்பட்டதாகும்.
"எங்கள் பகுதியில் இருக்கும் மின்சாதன பொருட்கள் மிகவும் சேதமடைந்து இருக்கிறது" என நான் பலமுறை மின்வாரியத்திடம் தெரிவித்துள்ளேன். அப்போதே அவர்கள் இந்த சேதமடைந்த மின்கம்பியை சரிப்படுத்தி இருந்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டு இருக்காது.
இதுபோன்ற உயிரிழப்புகள் வருங்காலங்களில் நடைபெறாமல் இருக்க சேதமடைந்த அனைத்து மின் தளவாடங்களையும் மாற்றி புதிய மின்சாதன பொருட்களை பயன்படுத்தி சரி செய்ய வேண்டும். பொது மக்கள் தங்களுடைய புகார்களை, கருத்துக்களை 24 மணி நேரமும் தெரிவிக்கும் வண்ணம் பொது மக்களுடனான தொடர்பை மின்வாரியம் ஏற்படுத்த வேண்டும்.
இரவு நேரங்களிலும் தகவலை பெறுவதற்கு மக்கள் தொடர்பு பணியாளர் ஒருவர் மின்நிலைய அலுவலகத்தில் பணியில் அமர்த்த வேண்டும். இறந்த அந்த பெண்ணின் குடும்பத்திற்கு மின்வாரியம் உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும்” என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!