நடுரோட்டில் இளைஞரைத் துவைத்தெடுத்த இளம்பெண்!
நடுரோட்டில் இளைஞர் ஒருவரை இளம்பெண் அடித்து துவைத்தெடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்தூரில் மதுமிலான் ஸ்கொயர் பகுதியில் இளம்பெண் ஒருவர் தெருவில் நபர் ஒருவரை வெளிப்படையாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சஞ்சு காம்லே தாக்கப்பட்ட முகேஷ் யாதவ் மற்றும் குறித்த பெண் ஏற்கனவே லிவ் -இன் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், திருமணத்திற்கு முகேஷ் மறுத்துவிட்டதால், அவர் மீது அசாத் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் விளைவாக ஒரு மாத காலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக வந்தபோது நடந்தது. அவரைக் கண்டதும், குறித்த பெண் கோபத்தில் வெடித்து, தெருவிலேயே அவரை தாக்க ஆரம்பித்துள்ளார். பொதுமக்கள் இடையீடு செய்ய முயற்சித்த போதும், விலக்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் காவல துறையினர் தலையிட்ட பிறகு தான் முகேஷ் அப்பெண்ணிடம் இருந்து மீட்கப்பட்டார் . அப்பெண் முகேஷ் தனது பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு உருவாக்கி, அடிக்கடி தொலைபேசி அழைப்புகள் மூலம் தொந்தரவு செய்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இச்சம்பவம் இந்தூரின் மிகப் பரபரப்பான சாலையிலேயே நடந்திருப்பதால் பலரும் அதைக் கவனித்து இது குறித்த வீடியோவையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். முதலில், சிலர் இது பொதுவழியில் பெண்களுக்கு எதிரான தொல்லை என்று எண்ணி நுழைய முயன்றபோதும், பின்னர் அந்த பெண் தன் முற்போக்கை விளக்கியதும் அவர்கள் பின்வாங்கியதாகவும் தெரிவித்துள்ளது. இதற்கு பிறகு இருவரும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
