எல்லையில் பதற்றம்... ராஜஸ்தான் ரயில் சேவையில் மாற்றம்!

ராஜஸ்தான் மாநிலத்தில் விமானப்படை தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த டிரோன்களை இந்திய விமானப்படை நடுவானில் அழித்தது. ராஜஸ்தான் எல்லை பகுதியிலும் இந்திய-பாகிஸ்தான் ராணுவத்திற்கு இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.
இதனை தொடர்ந்து ராஜஸ்தானில் ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் ராஜஸ்தானின் பகத் கி கோத்தி - பார்மர், பார்மர் - முனாபாவ் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. மேலும் ஜோத்பூர் - தாதர், ஜோத்பூர் - வாரணாசி எக்ஸ்பிரஸ் ஜோத்பூரில் இருந்து காலை 8.25 மணிக்குப் பதிலாக காலை 11.25 மணிக்கு புறப்படும்.
இந்த ரயில் 3 மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து ராஜஸ்தானில் 10க்கும் மேற்பட்ட ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தற்காலிக ரத்து மட்டுமே. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் மேலும் சில ரயில்கள் ரத்து செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!