ஜம்முவில் நீடிக்கும் பதற்றம்... இந்திய ராணுவம் பயங்கரவாதிகளை விமானம் மூலம் தேடுதல் வேட்டை!

 
ஜம்மு
 


இந்தியாவில் நேற்று  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில்  பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை  26 பேர் உயிரிழந்ததாகவும் அதில், 20 க்கும் மேற்பட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள், இரண்டு உள்ளூர் மக்கள், ஒரு எமிரேட் மற்றும் ஒரு நேபாள நாட்டவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் உச்சகட்ட பதற்றம்! 5 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 4 முதல் 6 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்த்துறை தெரிவிட்துள்ளது. இவர்கள் மலைப்பகுதிகளில் மறைந்திருக்க வாய்ப்புள்ளதால், இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகள் ஹெலிகாப்டர்களின் உதவியுடன் தீவிர தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஜம்மு காஷ்மீர்


பயங்கரவாதிகளின் இருப்பிடத்தைத் துல்லியமாகக் கண்டறியவும்,   நடவடிக்கை எடுக்கவும் உயர்நிலை உளவு மற்றும் வான்வழி கண்காணிப்பு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி அதற்கான வேலைகளிபோல் ஈடுபட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  ராணுவம் பயன்படுத்தும் ஹெலிகாப்டர்கள் மலைப்பகுதிகளில் பறந்து, கீழே உள்ள இடங்களை கண்காணிக்கின்றன. இவை இரவிலும் பார்க்கக்கூடிய கேமராக்கள் மற்றும் வெப்பத்தைக் கண்டறியும் கருவிகளைக் கொண்டவை.  பயங்கரவாதிகள் எங்கு மறைந்துள்ளனர் என்பதை  எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். மேலும், ஆளில்லா சிறிய விமானங்களும் (ட்ரோன்கள்) தகவல் சேகரிக்க உதவுகின்றன.


பஹல்காம் பகுதி மலைப்பகுதி, அடர்ந்த காடுகள் நிறைந்தது. இதனால் பயங்கரவாதிகளைக் கண்டுபிடிப்பது கஷ்டம். அவர்கள் குகைகளிலோ, மரங்களுக்கு இடையிலோ மறைந்திருக்கலாம். மேலும், அங்கு சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் இருப்பதால், ராணுவம் மிக கவனமாக செயல்பட்டு வருகிறது.  ராணுவம் இந்த தேடுதல் வேட்டையை தொடர்ந்து செய்து, பயங்கரவாதிகளை விரைவில் அவர்களை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?