சிதம்பரத்தில் பரபரப்பு... மகளைக் கொடூரமாக கொன்ற தந்தை.. காவல் நிலையத்தில் சரண்!

சிதம்பரத்தில் மகளைக் கொடூரமாக கொலைச் செய்த தந்தை, காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மணலூர் ஊராட்சிக்கு உட்பட்ட டி.மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனன். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் மற்றும் அபிதா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் அபிதாவிற்கு, பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் காதல் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த காதலுக்கு தந்தை அர்ஜுனன் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தொடர்ந்து அந்த இளைஞருடன் அபிதா பேசி வந்ததாகக் கூறப்படுகிறது,
இதைத் தொடர்ந்து அபிதாவிற்கு திருமணத்திற்காக வரன்கள் பார்த்து வந்த நிலையில், அபிதா தொடர்ந்து திருமண வரன்களை புறக்கணித்து, திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அர்ஜுனன், இன்று மகளுடன் மீண்டும் சண்டை போட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில் ம்கள் என்றும் பாராமல் அபிதாவின் கழுத்தை கத்தியால் அறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து அர்ஜூனன் தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து அறிந்த புத்தூர் போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட அபிதாவின் உடலை வீட்டு உடற்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே புத்தூர் காவல் நிலையத்தில் அர்ஜுனன் சரணடைந்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!