இளைஞர் குத்திக்கொலை !! சமரசம் பேச அழைத்து கொடூரம்!!

 
சிவராமன்

நெல்லை மாவட்டம் கோட்டரங்குளம் வடக்குத் தெருவைச் சேர்ந்த சிவராமன்(25) என்பவர், தனியார் நிறுவனம் ஒன்றில் பணம் வசூல் செய்யும் வேலை செய்து வந்தார். இவரது குடும்பத்திற்கும், அதேபகுதியைச் சேர்ந்த சுடலைமுத்து என்பவரது குடும்பத்திற்கும் இடையே நிலத்தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்துவந்தது.

இதனால் இருதரப்பினரும் அவ்வப்போது வாக்குவாதத்தில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று இரவு பணிமுடித்துவிட்டு வழக்கம் போல் வீடு திரும்பிக் கொண்டு இருந்த சிவராமனை, சுடலைமுத்துவின் மகன் உலகநாதன் என்ற சங்கர் அழைத்துள்ளார். 

சிவராமன்

அப்போது, நீண்டகாலமாக இரு குடும்பத்திற்கு இடையே இருக்கும் நிலப் பிரச்சினை தொடர்பாக சமரசம் பேச விரும்புவதாகவும், அதற்காக ஆலடியூர் பகுதியில் உள்ள கல்குவாரி பகுதிக்கு வருமாறும் அழைத்தார். அதை நம்பிய சிவராமனும் அங்கே சென்றார். அப்போது அங்கு மறைந்து இருந்த 5 பேர் கொண்ட கும்பல் சிவராமனை தாக்கினர். அவர் தப்பியோட முயன்றபோதும் அக்கும்பல் சுற்றிவளைத்து அரிவாளால் வெட்டியது.

எனினும் பைக்கை திருப்பிக் கொண்டு சிவராமன் வேகமாகச் செல்லும்போது, அந்த கும்பல் அவரது பின் தலையில் வெட்டியது. அந்த வெட்டுகாயங்களுடன் அதேபைக்கில் அம்பாசமுத்திரம் வரை சென்று டூவீலரில் இருந்து மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சிவராமன்

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதும், சிகிச்சைப் பலன் இன்றி இளைஞர் சிவராமன் இன்று காலையில் பரிதாபமாக உயிர் இழந்தார். சமரசம் பேசுவதுபோல் அழைத்து இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web