தலைநகரில் பரபரப்பு... கல்லூரி வளாகத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் வெட்டி படுகொலை!
May 6, 2025, 20:40 IST

சென்னையில் உள்ள வண்டலூர் பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் அமைந்துள்ள டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் வைத்து ஆம்புலன்ஸ் டிரைவர் மணிகண்டன் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தலைநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மணிகண்டன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளத்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From
around the
web