திருப்பரங்குன்றத்தில் மீண்டும் பதற்றம்… மலை மீது தீபம் ஏற்ற சென்ற பெண்கள் கைது!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை விவகாரம், நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் நேற்று இரவு திருப்பரங்குன்றம் மலை வழியில் அமைந்திருக்கும் சிக்கந்தர் பாதுஷா பள்ளிவாசல் சார்பில் சந்தனக்கூடு திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற ஏற்பாடுகள் நடந்து வந்தது. இதற்கான முன்னேற்பாடாக நேற்று 4 இஸ்லாமியர்கள் மலைக்கு சென்றதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
பழனியாண்டவர் கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் காவல்துறையினருடன், அவர்கள் மலைக்கு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று இரவு கொடியேற்றம் நடைபெற உள்ள நேரத்தில், பழனியாண்டவர் கோவில் தெருவை சேர்ந்த மக்கள் அகல்விளக்கு சட்டி ஏந்தி மலைக்கு சென்று தீபம் ஏற்ற வேண்டும் என்று கோஷமிட்டபடி வந்தனர். இதனை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். சம்பவ இடத்தில் உடனடியாக பதற்றம் ஏற்பட்டது.

காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய போதும், இஸ்லாமியர்களுக்கு மலை மீது கொடியேற்ற அனுமதி அளித்தால் தங்களுக்கும் தீபம் ஏற்ற அனுமதி வேண்டும் என மக்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இதையடுத்து, அரசு பேருந்து மூலம் பழனியாண்டவர் கோவில் தெருவை சேர்ந்த பெண்கள் உட்பட சிலர் அங்கிருந்து அகற்றப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
