இளைஞரை அடித்து கொன்று ஆற்றில் புதைத்த கும்பல்.. போலீசார் விசாரணை!

 
திருமாவளவன்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே முல்லை வாசல் கிராமத்தை சேர்ந்த ஆசீர்வாதம் என்பவர் மகன் திருமாவளவன் (24). இவர் கும்பகோணம் பகுதியில் அறுவடை இயந்திரம் ஓட்டி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 9 ஆம் தேதி உறவினர் வீட்டு துக்க  நிகழ்ச்சியில் பங்கேற்க கும்பகோணம் சென்ற நிலையில் மீண்டும்  வீடு திரும்பவில்லை. ஆனால், இளைஞர் அறுவடை இயந்திரம் ஓட்டும் வேலைக்கு சென்றிருக்கலாம் என பெற்றோர் கருதினர். இந்த நிலையில், சுமார் ஒரு வாரத்துக்கு இளைஞர் திருமாவளவனின் செல்போன் தொடர்ந்து சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததை அறிந்து, அவரது அறுவடை இயந்திர உரிமையாளரிடம் குடும்பத்தார் விசாரித்துள்ளனர். 

திருமாவளவன்

அதில், திருமாவளவன் வேலைக்கு வரவில்லை என தெரியவந்தது. அதன்பின்னரே குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக அவருடைய நண்பர் ஸ்ரீதர் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். 

இது ஒரு புறம் இருக்க, முல்லைவாசல் மதகடி அருகே மணல் லாரியில் மணல் ஏற்றி வந்த நபர்கள், மனித உடல் ஒன்று புதைக்கப்பட்டு இருப்பதை அறிந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பின்னர் நிகழ்விடத்துக்கு வந்து தோண்டி எடுத்துப் பார்த்ததில் இளைஞர் திருமாவளவனின் உடல் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது உடல் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

திருமாவளவன்

இந்த கொலைச் சம்பவம் எதனால் நடந்தது என்பது குறித்து நீடாமங்கலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமாவளவனின் நண்பர் ஸ்ரீதர் என்பவரை பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்து வருகிறார்கள் விரைவில் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளைஞர் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web