பயங்கரம்.. அடுத்தடுத்து 3 பைக்குகள் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு !

 
சாந்தி

சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அருகே உள்ள செலவடை கிராமத்தில் தேங்காய் பாரம் ஏற்றிய லாரியானது, தாரமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை காட்டுராஜா (31) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். லாரி செலவடை கூட்டுறவு சொசைட்டி அருகே உள்ள தரைப்பாலத்தில் வந்த போது அடுத்தடுத்து மூன்று இருசக்கர வாகனங்கள் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

சாந்தி

இந்த பயங்கர விபத்தில் தாரமங்கலம் ராமி ரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (26), இவரது அக்கா மகன் சந்தோஷ் (15) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர். நிவாஸினி ஒன்றை வயது குழந்தை சேலம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தது. அதேபோல மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த சாந்தி (40) என்பவரும் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். ஒரே விபத்தில் நான்கு பேரும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும், வசந்தகுமார் (38) மேட்டூர் சங்ககிரி ஆணை பள்ளம் பகுதியைச் சேர்ந்த இந்துமதி (23) இவரது மகள் இனியா (12) ஆகியோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல், மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மாதையன் (30) மேச்சேரி அருகே மாதநாயக்கன்பட்டியை சேர்ந்த மாதேஷ் (30) ஆகிய இருவரும் சேலத்தில் மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சாந்தி

இந்த பயங்கர விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது லாரி ஓட்டுநர் மது போதையில் இருந்ததால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநர் காட்டுராஜாவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web