கோர விபத்து... தறிகெட்டு ஓடிய லாரி... கார் மீது மோதி 6 பேர் பலி!

 
கார் விபத்து

மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் தறிகெட்டு, வேகமாக ஓடிய லாரி கார் மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

நேற்று நள்ளிரவு 7 பேர் கொண்ட குழுவினர், ஒரு காரில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர், கடோல்-கல்மேஷ்வர் புறநகர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அதே சாலையின் எதிர்புறத்தில் பயங்கர வேகத்தில் காய்கறி லோடு ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்த லாரி ஒன்று, திடீரென கட்டுப்பாட்டை இழந்த நிலையில், எதிரே வந்து கொண்டிருந்த கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் இருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அப்பகுதி மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களில் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 3 பேர் மேல்சிகிச்சைக்காக நாக்பூரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

அவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web