பயங்கரம்... மசூதியில் திடீர் குண்டுவெடிப்பு... 5 பேர் உடல் சிதறி பலி... 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அக்கோரா கட்டக் மாவட்டத்தில் தலிபான் சார்பு பாடசாலை பகுதியில் உள்ள ஒரு மசூதியில் இன்று குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் மசூதியில் வழிபாடு நடத்திய 5 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததால் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரமலான் நோன்பு தொடங்கவிருக்கும் நேரத்தில் மசூதியில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரையில் எந்த பயங்கரவாத அமைப்பினரும் பொறுப்பு ஏற்கவில்லை என காவல் அதிகாரிகள் கூறினர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
