தென்காசியில் பயங்கரம்.. வாக்குவாதம் செய்த மனைவியை கழுத்தறுத்து கொலைச் செய்த கணவன்!

 
ராஜேஸ்வரி

தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜ்நகரில் நவமணி (53)- ராஜேஸ்வரி (43) தம்பதி வசித்து வந்தனர். இதில் நவமணி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இதனிடையே, கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. இதனால் ராஜேஸ்வரி தனியாக சென்று வாடகைக்கு வீடு எடுத்து அதில் வசித்து வந்தார்.

ராஜேஸ்வரி

இந்நிலையில் நவமணி அவரது மனைவியைப் பார்க்க அந்த வீட்டுக்கு சென்றுள்ளார். அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே இரண்டு பேருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து மனைவியின் கழுத்தை நவமணி அறுத்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த ராஜேஷ்வரியின் அலறல் சத்தம் கேட்கவே, அருகில் இருந்தவர்கள் வீட்டுக்கு சென்றனர். அப்போது நவமணி அந்த இடத்தை விட்டு தப்பி சென்றுள்ளார். உறவினர்கள் உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

ராஜேஸ்வரி

இதையடுத்து சம்பவ இடத்திற்க்கு வந்த சுரண்டை போலீசார் படுகாயம் அடைந்த பெண்ணை மீட்டு தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து சுரண்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய  கணவனை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மனைவியை கணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web