பயங்கர அதிர்ச்சி... குழந்தை ரூபத்தில் சாத்தான்... 3 வயசு சிறுமியை பலாத்காரம் செய்த 1ம் வகுப்பு மாணவன்!

 
சிறுமி

இன்றைய தலைமுறை எதை நோக்கி போய் கொண்டிருக்கிறது... அடுத்த தலைமுறைக்கு நாம் எதைக் கற்று தருகிறோம்... என்ன மாதிரியான சமூகத்தை  உருவாக்க முனைந்துள்ளோம் என்பதெல்லாம் பெரும் அதிர்ச்சியாக உள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் 3 வயசு சிறுமியை 1ம் வகுப்பு படிக்கும் சிறுவன் (?) பாலியல் பலாத்காரம் செய்தது பெற்றோர், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் உறுதி செய்யப்பட்டதால், 1ம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி உள்ளனர். 

உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் சிறுவர் சிறுமியர்களுக்கான பள்ளிக்கூடம் ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த பள்ளியில் 3 வயதுக்குள்ளோருக்கான வகுப்பில் படித்து வந்த சிறுமியிடம், அதே பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்த சிறுவன் ஒருவன் நட்புடன் பழகி வந்துள்ளான். 

school

இந்நிலையில், சிறுமியை பள்ளியின் மேல் பகுதிக்கு ஆசை வார்த்தைகள் கூறி, அழைத்து சென்ற 1ம் வகுப்பு மாணவன், அங்கு வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். பள்ளி முடிந்து வீடு திரும்புகையில், இது குறித்து சிறுமி அவளது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளாள்.

மழலை மொழியில், சிறுமி, சிறுவனின் பெயரைச் சொல்லி, சொன்னது புரியாமல், மீண்டும் கேட்ட பெற்றோர் நம்ப முடியாமல் அதிர்ச்சியில் உறைந்தனர். அதன் பின்னர், சிறுமியையும் அழைத்துக் கொண்டு, பெற்றோர் போலீசிடம் புகார் அளித்துள்ளனர்.

வழக்கு பதிவு செய்து விசாரித்த போலீசார், குற்றம் நடைப்பெற்றதை உறுதி செய்தனர். அதன் பின்னர், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பின், சிறுவனை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

கடந்த ஆண்டும் இதே போன்றதொரு சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது. மத்திய பிரதேசத்தில் 3 வயது சிறுமி உணவு வாங்க கடைக்கு செல்ல முயற்சித்த போது, 12 வயது சிறுவன் அந்த சிறுமியை வழிமறித்து நின்று உள்ளான்.

Police

அதன் பின் சிறுமிக்கு சாக்லேட்டுகளை கொடுத்து உள்ளான். அடிக்கடி இது போன்று இனிப்புகளைக் கொடுத்து, சிறுமியை தன்னை பார்க்க வரும் படி செய்துள்ளான். சிறுமியும் சாக்லேட்டுக்கு ஆசைப்பட்டு சிறுவனை தேடி சென்றுள்ளார்.  இதன் பின் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் அப்போது மத்திய பிரதேசத்தில் பரபரப்பாக பேசப்பட்டு, கடும் விவாதத்திற்குள்ளானது. 

பெற்றோர்களே... உஷாராக இருங்க... குழந்தை தானே என்று நம்பியும் விட  முடியவில்லை. குழந்தை ரூபத்தில் கடவுள் மட்டுமல்ல... சாத்தான்களும் நடமாடுகின்றன. நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web