பயங்கரம்.. ஆட்டோவில் சென்ற பெண் நள்ளிரவில் கொடூரமாக வெட்டிக்கொலை !!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஜமீன் தேவர்குளம் பகுதியில் மணிகண்டன்- வெள்ளத்துரைச்சி(28) தம்பதி வசித்து வந்தனர். மணிகண்டன் கட்டிடத் தொழிலாளி ஆவார். இந்த நிலையில் வெள்ளத்துரைச்சி கடந்த 9ஆம் தேதி இரவு 9 மணியளவில் குமரெட்டியாபுரத்தில் இருந்து கட்டாரங்குளத்திற்கு ஆட்டோவில் சென்றார்.
கோவில்பட்டி வானரமுட்டியை சேர்ந்த சண்முகராஜ் (33) ஓட்டிச்சென்றார். காட்டுப்பகுதியில் சென்றபோது திடீரென வந்த ஒரு கும்பல் ஆட்டோவை வழிமறித்தது. பின்னர் கண்இமைக்கும் நேரத்தில், வெள்ளத்துரைச்சி மற்றும் ஆட்டோ ஓட்டுநரை அந்த கும்பல் அரிவாள், கத்தியால் வெட்டியது. எனினும் அவர்களிடமிருந்து தப்பி இருவரும் காட்டுப்பகுதியில் ஓடினர்.
ஆனாலும் ஆத்திரம் தீராத அந்த கும்பல் இருவரையும் துரத்திச்சென்று ஓட ஓட விரட்டி சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது. இதில் ரத்த வெள்ளத்தில் வெள்ளத்துரைச்சி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆட்டோ ஓட்டுநர் சண்முகராஜூக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பெண்ணை வெட்டி கொலை செய்தவர்கள் யார்? எதற்காக இந்த கொலை செய்யப்பட்டது? உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில்பட்டி அருகே ஆட்டோவை வழிமறித்து இளம்பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!