தை மகள் பிறந்தாள்... இன்று பொங்கல் வைக்க நல்ல நேரம் இது தான்!
வாழ்க்கையில் வசந்தத்தைக் கொண்டு வர தை மகள் பிறந்தாள். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்று காலங்காலமாக நம் நம்பிக்கையைச் சுமக்கும் பண்டிகையாகவும் பொங்கல் திருநாள் இருந்து வருகிறது. இயற்கை, சூரிய பகவான், விவசாயம் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக போகி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. உழவர்களும் உழவுக் காளைகளுமே இந்த திருநாளின் நாயகர்கள்.

சூரியன் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குள் நுழையும் நாளே தை மாதப் பிறப்பு. இதையே மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி எனக் கொண்டாடுகிறார்கள். அந்த வகையில், இன்று பொங்கல் திருநாளில் அதிகாலையில் எழுந்து வாசலில் வண்ணக் கோலம் போட்டு, வீடுகளை அலங்கரித்து தை திருமகளை வரவேற்பது வழக்கம்.
புதிய பானையில் புது அரிசி, பால் வைத்து பொங்கல் பொங்கும் போது “பொங்கலோ பொங்கல்” என குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் முழங்குவார்கள். சூரிய பகவானுக்கு சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் படைத்து வழிபடுவர்.

இஞ்சி, மஞ்சள் குலை, கரும்பு, வாழை, தானியங்கள் ஆகியவற்றையும் படைத்து விவசாயம் செழிக்க வேண்டுகின்றனர். இன்று காலை 6 மணிக்கு முன் சூரிய பொங்கல் வைப்பது நல்லது. அப்படி சூரிய பொங்கல் வைப்பவர்கள் நல்ல நேரம் பார்க்க தேவையில்லை. காலை 6 மணிக்கு முன்பாக எப்போது வேண்டுமானாலும் வைக்கலாம். அதன் பிறகு வைப்பவர்கள் இன்று காலை 7.45 முதல் 8.45 மணிக்குள் பொங்கல் வைக்கலாம். இந்த நேரத்தை தவற விடுபவர்கள் இன்று காலை 10.35 முதல் 1 மணிக்குள் பொங்கல் பானையை அடுப்பில் ஏற்றி வழிபடலாம்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
