அந்த தியாகி அதிமுக தொண்டர்கள்தான் ... முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் பதிலடி!

தமிழகத்தில் மார்ச் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை அமலாக்கத்துறை திடீர் சோதனை நடத்தியது. இதனையடுத்து அமலாக்கத்துறை, மதுபானங்கள் கொள்முதல், பார் உரிமங்கள் வழங்கியது, மதுபானங்கள் போக்குவரத்து உரிமங்கள் வழங்கியது உட்பட பல நடவடிக்கைகளில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்திருப்பதாக அறிக்கை வெளியிட்டது.
இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஊழல் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என அதிமுக உட்பட அனைத்து எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. டாஸ்மாக்_ஊழல் பின்னணியில் உள்ள #அந்த_ தியாகி_யார் ? என்ற கேள்வியை பேட்ஜாக அணிந்து சட்டப்பேரவை நிகழ்வுகளில் அதிமுக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இந் நிலையில், அந்த தியாகி யார்? என்ற அதிமுக எம்.எல்.ஏக்களின் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் நொந்து நூடுஸ்லாகிப்போன அதிமுக தொண்டர்கள்தான் தியாகி. முதல்வர் பதவிக்காக காலில் விழுந்து ஒருவரை ஏமாற்றினரே, அந்த அம்மையார்தான் தியாகி .அதிமுகவினர் தாம் சிக்கியுள்ள பல்வேறு வழக்குகளில் இருந்து தப்பிக்கவே காலில் விழுந்துள்ளனர்”
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!