தொடரும் தாக்குதல்கள்... விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு!

 
விமானம் விமான நிலையம்

இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ட்ரோன் தாக்குதல் , கப்பற்படை மூலம் தாக்குதல், என முப்படைகளும் களத்தில் இறக்கப்பட்டு இருப்பதால்ல் போர்ப்பதற்றம் நிலவி வருகிறது. ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமானத்திலிருந்து  இறங்கி வரும் பயணிகளும் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.   

சென்னை - சேலம் விமான சேவை

இந்தியா-பாகிஸ்தான் போர்ப்பதற்றத்தை தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தின் உள்ளே நுழையும் வாகனங்கள் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரால் கண்காணிக்கப்பட்டு தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது. இதேபோல் பயணிகளின் உடைமைகள், ஆவணங்கள் சோதனை செய்யப்படுகிறது. 

knife airport விமான நிலையம் கத்தி விமானநிலையம் உள்ளூர்

இதனைத் தொடர்ந்து பயணிகளின் உடைமைகளை ஸ்கேனர் கருவியின் மூலம் சோதனை செய்யப்படுகிறது. மேலும் விமான நிலையத்தின் ஏப்ரான் பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் விமானத்தில்  இருந்து இறங்கி வரும் பயணிகளும் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த சோதனை மே 18 வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web