பறவை மனிதர் காலமானார்... கிளிக் கூட்டத்திற்கு 20 ஆண்டுகள் உணவளித்த சேகர் மரணம்!

 
பறவை மனிதர்
சென்னையில் தினமும் பல ஆயிரம் கிளிகளுக்கு உணவளித்து வந்தவர் சேகர். இவர் ‘பறவை மனிதர்’ (Bird Man) என்றே இந்திய அளவில் பிரபலமானவர். இவரது இயற்பெயர் ஜோசஃப் சேகர். இவர் சென்னை ராயப்பேட்டையில் கேமரா பழுதுபார்க்கும் வேலை செய்து வந்தார். முதலில் இவரது அலுவலக மாடிப்பகுதியில் ஒன்றிரண்டு கிளிகளுக்கு மட்டுமே உணவு அளித்தார்.

காலப்போக்கில், இவரைத் தேடி ஆயிரக்கணக்கான கிளிகள் வரத் தொடங்கின. சுமார் 20 ஆண்டுகளாக இந்தச் சேவை நடந்து வந்தது. இவருக்கு கேமராக்களைச் சேகரிக்கும் பழக்கமும் இருந்ததால், 'கேமரா ஹவுஸ் சேகர்' என்றும் அழைக்கப்பட்டார். பல முன்னணி வெளிநாட்டு ஊடகங்கள் இவரது இந்தச் செயலைக் கண்டு ஆச்சரியம் அடைந்தன.

வாடகை வீட்டில் இருந்ததால் வீட்டை காலி செய்யச் சொல்லி உரிமையாளர் கேட்டார். வீட்டை காலி செய்தால் கிளிகளுக்கு உணவளிக்க முடியாது என அவர் கவலைப்பட்டார். வீட்டை வாங்குவதற்காகத் தன் கேமரா சேமிப்புகளை விற்கவும் அவர் திட்டமிட்டார். ஆனால், அது நடக்கவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டை விட்டுச் சென்றதால் கிளிகளுக்கு உணவளிக்க முடியாமல் அவர் மிகுந்த வருத்தத்தில் இருந்தார். இந்த நிலையில், தமிழகத்தின் இந்த 'பறவை மனிதர்' சேகர் நேற்று இரவு காலமானார். நுரையீரல் புற்றுநோய் காரணமாக அவர் உயிரிழந்தார். இவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!